திங்கள், 5 செப்டம்பர், 2016

மாந்திரீகம்




 ஜால வித்தைகள்

 

நிறைய மாந்திரீகர்கள் அக்காலத்தில் ஒரு சில ஜால வித்தை மட்டுமே படித்து வைத்து விட்டு நிறைய மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.


ஒருவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள் அந்த நபரால் இந்த பேயை விரட்ட முடியாது .ஒரு சாதாரண பேயை விரட்டும் சக்தி கூட இந்த ஜால வித்தை காரர்களுக்கு இல்லாமல் போகின்றது .


ஒருவர் வந்து வீட்டில் அதிகம் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது என்று இந்த மந்திரவாதியிடம் கூறியிருப்பார் .இவர் என்ன செய்வார்.அந்த வீட்டிற்கு சென்று பார்க்க போவார் .வீட்டை பார்த்து விட்டு கூறுவார் .இந்த வீட்டில் செய்வினை வைக்கப்பட்டுள்ளது .அதை எடுக்க வேண்டும் அப்போது தான் உங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் நீங்கும் என்று கூறுவார் .



அவர்களுக்கு பிரச்சனைகள் தீர்ந்தால் போதும் என்று எவ்வளவு பணம் ஆகும் என்று கேட்ப்பார் அவரும் பெரிய யாக பூஜை போட வேண்டியிருக்கிறது மற்றும் மயானத்தில் போய் பூஜை போடா வேண்டும் அதனால்  20000 ரூபாய் ஆகும் என்று கூறுவார் .அவர்களும் பயமுடன் சரி உடனே செய்து விடுங்கள் என்று பணம் கொடுப்பார்கள் .



அவர் பூஜைக்கான பொருட்கள் எல்லாம் வாங்கி விட்டு யாகத்திற்கான மர சுள்ளிகளையும் கொண்டு வருவார் அந்த கம்பில் ஒன்றில் ஓட்டை போட்டு அதனுள் இரண்டு யந்திரத் தகடுகளை எழுதி உருட்டி வைத்து விடுவார் .



யாகம் செய்யும் பொது வீட்டுகாரர் இடமே இந்த கம்புகளை யாகத்தில் உங்கள் கைகளால் போடுங்கள் என்று கொடுப்பார் .அவர்களும் போடுவார்கள் அந்த கம்பில் தான் இவர்கள் வைத்த யந்திர தகடு இருக்கிறது என்று வீட்டுகாரர்களுக்கு தெரியாது .கடைசியில் யாகம் முடிந்தது அந்த யாக குண்டத்தில் தேடித் பார்ப்பார்கள் இரண்டு தகடுகள் வெளிவரும் .இதை வீட்டு காரரை அழைத்து இதோ பூஜை செய்து உனக்கு வைத்த செய்வினையை எடுத்து விட்டேன் .இந்த யந்திர தகடுகளை ஆற்றிலோ அல்லது கடலிலோ கொண்டு சேர்க்க வேண்டும் .என்று கூறி தகட்டை கொண்டு செல்வார்கள் .



இப்படித்தான் ஜால வித்தைகளை செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் .

மாந்திரீகம் என்பது சித்தர்கள் மற்றும் முனிவர்கள் இறைவனின் அருளால் கண்டறிந்த ஒரு அரிய தெய்வீக கலை.மக்களின் வாழ்வில் ஏற்படும் சகல துன்பங்களை நீக்கி இன்பங்களை கொடுக்கும் அற்புத கலை.



இதன் பயன்பாடுகள் பற்றி சித்தர் நூல்கள், மாந்திரீகம்,மாயாஜால
வித்தைகள் போன்ற நூல்களில் உள்ளது.என்றாலும் இதனை அனுபவ முறையில் கையாண்டு
 வெற்றி பெற நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு குருவின் வழிகாட்டுதல் கண்டிப்பாகத் தேவை.  
இதனைஅனைவரும்அறிந்து கொள்ளும் ஒரு அரிய தகவலாகவே பதிவு
 செய்கின்றோம். மேலும் இம்முறைகளை கையாள விரும்புபவர்கள்

சுயநலத்திற்கு என்றில்லாமல் பொது நலத்தையும் அறிந்து பயன்படுத்த வேண்டுகிறோம்.

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக