திங்கள், 5 செப்டம்பர், 2016

உடற்கட்டு மந்திர பிரயோகம்



 மாந்திரீக தொழிலில் உடற்கட்டு என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது .இந்த உடற்கட்டு மந்திரத்தை சித்தி செய்து கொண்டு மயானத்தில் அல்லது வெளி இடங்களில் பூஜை செய்யும் பொது மற்ற தேவதைகள் நாம் செய்யும் பூஜையை தடை செய்யும் பொருட்டு நம்மை தாக்க வரும் அதிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டுமானால் .முதலில் உடற்கட்டு மந்திரத்தை முறையாக சித்தி செய்து கொண்டு அதன் பிறகு எந்த ஒரு பூஜையையும் துவங்க வேண்டும் .




 


உடற்கட்டு மந்திரம் :

ஓம் உமா மகேஸ்வரன் முன்னிற்க
பாதமிரண்டும் பூமி தேவி காக்க ,
கனுக்காலிரண்டும் கணபதி காக்க ,
துடையுமுந்தியும் துர்க்கை காக்க ,
வயிறு மார்பும் வைரவன் காக்க ,
கழுத்தும் புஜமும் கதிர்வேல் காக்க ,
கண்ணும் புருவமும் காளி காக்க ,
முகமும் கபாலமும் மும்மூர்த்தி காக்க,
ஓம் அம் உம் சம் வம் சிவ சிவா 
கட்டு கட்டு என் தேகம் முழுவதும் 
சங்கு சக்கரம் காக்க பகைவரைக்கட்டு ,
பிசாசுகளை கட்டு எதிரிகளை கட்டு ஏவலை கட்டு ,
இந்திரன் முதல் ஈசானயங்கட்டு
நான் தொட்ட மந்திரம் நீ தொட்ட மந்திரம் ,
நான் தொட்ட மூலி ,நீ தொட்ட மூலி 
எட்டு திசையும் பதினாறு கோணமும் என் முகமாக 
ஓம் சிவய நம சிவய நம சிவய நம .

இந்த மந்திரத்தை ஓடுகின்ற தண்ணீரில் நின்று கொண்டு 1008 ஜெபித்து விட்டு மறுநாளில் இருந்து பிள்ளையார் பிடித்து வைத்து அருகு சூட்டி அதற்கான அவள் பொறி கடலை படைத்து ஒரு நாளுக்கு 108 வீதம் 11 நாட்கள் ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும் .இதனால் சர்வ மந்திர சித்தியும் சர்வ மூலிகை சித்தியும் ஆகும் .


இம்மந்திரத்தை சித்தி செய்யாமல் மந்திர பிரயோகம் செய்தால் அதன் அனுபவ முறைகளை  கூறுகின்றேன் .

ஏதாவது இடத்தில் பூஜை செய்து கொண்டிருக்கும் போது இந்த உடற்கட்டு போடாமல் பூஜைகள் செய்தால் அந்த போச்சி வெற்றியடையாது .அந்த தேவதைகளுக்கு தேவையான படையல் போடவில்லை என்றால் அது நம்மை தாக்கும் அதன் அறிகுறி அந்த நேரமோ அல்லது மறுநாள் காலையிலோ நமக்கு உலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டு பிடிக்கலாம் அதனை போக்க அதற்கான உச்சாடன மந்திரம் கொடுத்து அதை விரட்ட வேண்டும் .



இப்படி அனுபவத்தில் பல உள்ளன ஆகவே ஏதாவது புத்தகங்களை படித்து விட்டு மாந்திரீகம் செய்கிறேன் என்று முயற்சிக்க வேண்டாம் ஏனென்றால் அந்த மந்திரங்களில் எதிர் விளைவுகள் நமக்கு கிடைக்க இருக்கும் வெற்றிகளை தடை செய்யும் .அதனால் சரியானவர்களிடம் பயின்று பிரயோகம் செய்ய முயலுங்கள் .



மாந்திரீகம்




 ஜால வித்தைகள்

 

நிறைய மாந்திரீகர்கள் அக்காலத்தில் ஒரு சில ஜால வித்தை மட்டுமே படித்து வைத்து விட்டு நிறைய மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.


ஒருவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள் அந்த நபரால் இந்த பேயை விரட்ட முடியாது .ஒரு சாதாரண பேயை விரட்டும் சக்தி கூட இந்த ஜால வித்தை காரர்களுக்கு இல்லாமல் போகின்றது .


ஒருவர் வந்து வீட்டில் அதிகம் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது என்று இந்த மந்திரவாதியிடம் கூறியிருப்பார் .இவர் என்ன செய்வார்.அந்த வீட்டிற்கு சென்று பார்க்க போவார் .வீட்டை பார்த்து விட்டு கூறுவார் .இந்த வீட்டில் செய்வினை வைக்கப்பட்டுள்ளது .அதை எடுக்க வேண்டும் அப்போது தான் உங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் நீங்கும் என்று கூறுவார் .



அவர்களுக்கு பிரச்சனைகள் தீர்ந்தால் போதும் என்று எவ்வளவு பணம் ஆகும் என்று கேட்ப்பார் அவரும் பெரிய யாக பூஜை போட வேண்டியிருக்கிறது மற்றும் மயானத்தில் போய் பூஜை போடா வேண்டும் அதனால்  20000 ரூபாய் ஆகும் என்று கூறுவார் .அவர்களும் பயமுடன் சரி உடனே செய்து விடுங்கள் என்று பணம் கொடுப்பார்கள் .



அவர் பூஜைக்கான பொருட்கள் எல்லாம் வாங்கி விட்டு யாகத்திற்கான மர சுள்ளிகளையும் கொண்டு வருவார் அந்த கம்பில் ஒன்றில் ஓட்டை போட்டு அதனுள் இரண்டு யந்திரத் தகடுகளை எழுதி உருட்டி வைத்து விடுவார் .



யாகம் செய்யும் பொது வீட்டுகாரர் இடமே இந்த கம்புகளை யாகத்தில் உங்கள் கைகளால் போடுங்கள் என்று கொடுப்பார் .அவர்களும் போடுவார்கள் அந்த கம்பில் தான் இவர்கள் வைத்த யந்திர தகடு இருக்கிறது என்று வீட்டுகாரர்களுக்கு தெரியாது .கடைசியில் யாகம் முடிந்தது அந்த யாக குண்டத்தில் தேடித் பார்ப்பார்கள் இரண்டு தகடுகள் வெளிவரும் .இதை வீட்டு காரரை அழைத்து இதோ பூஜை செய்து உனக்கு வைத்த செய்வினையை எடுத்து விட்டேன் .இந்த யந்திர தகடுகளை ஆற்றிலோ அல்லது கடலிலோ கொண்டு சேர்க்க வேண்டும் .என்று கூறி தகட்டை கொண்டு செல்வார்கள் .



இப்படித்தான் ஜால வித்தைகளை செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் .

மாந்திரீகம் என்பது சித்தர்கள் மற்றும் முனிவர்கள் இறைவனின் அருளால் கண்டறிந்த ஒரு அரிய தெய்வீக கலை.மக்களின் வாழ்வில் ஏற்படும் சகல துன்பங்களை நீக்கி இன்பங்களை கொடுக்கும் அற்புத கலை.



இதன் பயன்பாடுகள் பற்றி சித்தர் நூல்கள், மாந்திரீகம்,மாயாஜால
வித்தைகள் போன்ற நூல்களில் உள்ளது.என்றாலும் இதனை அனுபவ முறையில் கையாண்டு
 வெற்றி பெற நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு குருவின் வழிகாட்டுதல் கண்டிப்பாகத் தேவை.  
இதனைஅனைவரும்அறிந்து கொள்ளும் ஒரு அரிய தகவலாகவே பதிவு
 செய்கின்றோம். மேலும் இம்முறைகளை கையாள விரும்புபவர்கள்

சுயநலத்திற்கு என்றில்லாமல் பொது நலத்தையும் அறிந்து பயன்படுத்த வேண்டுகிறோம்.

 



இறந்தவர்களை கனவில் வந்தால் நல்லதா? கெட்டதா?


http://www.aanmeegamalar.com/all-images/img/news16/49416787-kanavoo.jpg

நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், நமக்கு பிடித்தவர்கள், போன்றோர் இறந்தால், சில நேரங்களில் நமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும். அவ்வாறு அவர்கள் வந்தால் வீண் பயம் நம்மைத் தொற்றிக் கொள்வதும் அதுகுறித்த சிந்தனையும் அடிக்கடி தோன்றி நம்மை படாத பாடு படுத்திவிடும். 

இதுகுறித்து ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம். 

இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும். 

ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். 

இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம். வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை .


குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

மரங்களும் அதன் தெய்வீக சக்திகளும்



துளசி

         துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.



சந்தன மரம்

  சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிபடுகின்றன. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.



அத்திமரம்

                அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்ப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மனசாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக கைகூடும்.



மாமரம்

               மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தபடுகின்றன. சுபகாரியங்கள் செய்யும்  போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்க விடப்படுகிறது.



அரசமரம்

              அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.



ஆலமரம்

                 ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது.



மருதாணிமரம்

                 மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கேட்ட கனவுகள் வராது.



ருத்ராஷ  மரம்

                ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. ருத்ராஷ கோட்டையை  உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.



ஷர்ப்பகந்தி

                 இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டி கொண்டால் பாம்புகள் தீண்டாது.



நெல்லி மரம்

                   நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தம்பதிகளை அமரவைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும்.



வில்வமரம்

                    வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால்  சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.



வேப்பமரம்

                     வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.



கருவேல மரம்

                  கருவேல மரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும் இம்மரத்தின் காய் மற்றும் வேர்களை மந்திரவாதிகள் தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகள் இம்மரத்தின் மீதுதான் குடியிருக்கும்.



காட்டுமரம்

                   காட்டு வேம்பு பிரம்மாவின் அம்சமாகும். ஒரு சிலர் இதை விஷ்ணும் அம்சம் என கூறுவர். இம்மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிபடுத்தும்.



அசோக மரம்

                     அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.



புளிய மரம்

                    புளியமரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும். புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாகும். புளிய மரங்களில் பேய், பிசாசுகள் தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை.



மாதுளம் மரம்

                     மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே விளகேற்றி தம்பதிகளால் வலம் வர தம்பதிகளிடையே அன்னியோன்யம் ஏற்படும்

நாம் செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறைக்கு பலன் கிடைக்கும் ?



Image result

நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல‍ காரியத்தின் புண்ணியம் என்பது நிச்சயம் உள்ளது என்று வேதங்கள் சொல்வது மறுக்க முடியாத ஒன்று, அதில் என்ன என்ன புண்ணியம் செய்தால் எத்தனை எத்த‍னை தலைமுறைக்கு அந்த புண்ணியம் போய் சேரும். என்பது விரிவாக  வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. 



பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் - 5 தலைமுறைக்கு. 


புனித‌ நதிகளில் நீராடுதல் - 3 தலைமுறைக்கு .


திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் - 5 தலைமுறைக்கு. 


அன்னதானம் செய்தல் - 3 தலைமுறைக்கு. 


ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் - 5 தலைமுறைக்கு.


பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது - 6 தலைமுறைக்கு. 


திருக்கோயில் புனர்நிர்மாணம் - 7 தலைமுறைக்கு. 


அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தல் - 9 தலைமுறைக்கு. 


பசுவின் உயிரைக் காப்பாற்றுவது - 14 தலைமுறைக்கு. 


முன்னோர்களுக்கு கயா ஷேத்திரத்தில் பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் - 21 தலைமுறைக்கு. 


நாமும் முடிந்தவரை நல்ல‍ காரியங்கள் செய்து நமக்கும் நமது வருங்கால தலைமுறைக்கும் புண்ணியம் சேர்ப்போம் .


நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும். 


நல்ல‍ காரியங்கள் செய்யும்போது அதற்கான புண்ணியம் எப்ப‍டி நமது தலை முறையினருக்கு சென்று சேருகிறதோ அதேபோல் நாம்செய்யும் தீய செயல்களுக்கான பாவங்களும் நமது தலைமுறையினருக்கு சென்று சேரும் என்பதை மறக்காதீர். 


செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

ஆறாவது அறிவு



 தன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கும் வாத்து!

ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)

top10_phenomena_intuition 


 நம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன்.  அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம  நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு  விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல  நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல!