வெள்ளி, 12 ஏப்ரல், 2019

வாசியோகம்..! பாடம் 1

பாடம் 1
மாணவர் தகுதி: இயமம், நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

நன்றி :  யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி.
வாசியோகம்  ஏன் செய்ய வேண்டும் .?
மனிதப் பிறவியில் ஒவ்வொருவரும் பெற வேண்டியது நான்கு சித்திகள்
1)        காய சித்தி: 
அழியும் உடலை அழியாமல் பாதுகாத்தல்.
2)        வேதை சித்தி:
ஒரு பொருளின் அணுத்தன்மையை மாற்றுதல், மதிப்பு குறைந்தவற்றை மதிப்பு மிக்கதாக மாறச்செய்தல்பயன்படுத்தல்அறவழி பொருள் ஈட்டல் ஆகியவை வேதை. சாகா மருந்து என்ற முப்பூ செய்து முடித்தல் வேதை சித்தி.
3)         யோகசித்தி : 
யோகா என்றால் இணைத்தல் என்று பொருள். பொருள்களை இணைத்து புதிய பொருள் பெறுவது வேதை. அழியும் உடலை அழியா உடலாக மாற்ற இறைவனோடு இணைத்தல் காய சித்தி. இறைவனோடு இணைந்து ஒன்றிப்போதல் ஞானம்.இம்மூன்றையும் பெறுவதற்கான தொழில் நுட்பம் சொல்வது யோகா.இதில் வெற்றி பெறுதல் யோகசித்தி.
4)         ஞான சித்தி:
இதுவே முக்தி. காய சித்திவேதை சித்தியோகசித்தி அடைய வேண்டும். தன்னுள் இறைவனை ஒளி வடிவில் கண்டுஇறைவனுடன் ஒன்றிநிலைத்த பேரின்பம் பெற்றுஇறைவனாக ஐந்தொழில் செய்தல்    (படைத்தல்காத்தல்அழித்தல்மறைத்தல்அருளல்).
  வாசியோகா :
யோகா என்பதில் பலவிதங்கள் உண்டு.இந்தியர்களின் யோகாவில் முக்கியமானவை:
 பக்தி யோகம் :  
இறைவனிடம் பக்தி செய்து முக்தி அடைதல்
ஹடயோகம் : 
 உடலைப் பேணி பலவித பிராணாயாமம் செய்து,பந்தனம்,முத்திரைகிரியை ஆகிய முறைகளைப் பின்பற்றி இறைவனை அடைதல்.
கர்ம யோகம்:  
நமது கடமைகளை விருப்பு வெறுப்பு இல்லாமல் இறைவனுக்கு அர்ப்பணித்து செய்தல். அதன் மூலம் இறைவனை அடைதல் .
வாசி யோகம் : 
 இதற்கு அஷ்டாங்க யோகம் குண்டலி யோகம்ராஜ யோகம் ஆகிய பெயர்கள் உண்டு. இதைச் சிறிது மாற்றி கிரியாயோகம் என்றும் சொல்லுவார்கள் .
வாசி யோகத்தில் எட்டு அங்கங்கள் உண்டு. அவை இயமநியமஆசனபிரணாயாம,பிரத்தியாகார, தாரண தியானசமாதி.
வாசி என்பது காலக் கணக்கோடுநெறிப்படுத்திய சுவாசம்இந்த நெறிப் படுத்திய சுவாசத்தைப் பயன்படுத்தி,குண்டலினி என்னும் சக்தியை உருவாக்கி அதை வாலையாக ஒளிரச் செய்வது. இந்த வாலை என்ற ஒளி தான் பூரணம் என்ற இறைவன். இந்த வாலை எல்லையற்ற சக்தி கொடுக்கும்.இந்தச் சக்திகள் சித்தி எனப்படும்.சித்திகள் 64 இருந்தாலும் 8 சித்திகள் அஷ்டமா சித்திகள் எனப்படும். அமிர்தம் என்ற சாகாசுரப்பை வாலைகொடுக்கும். இதுவே உடலை அழியாமல் காக்கும்.
வாசி யோகச் சிறப்பு:
உலகில் பலவிதமான யோகா நெறிகள் உண்டு. அந்தநெறி இந்த நெறி என்று எண்ணாமல் அட்டாங்கம் என்ற வாசி யோகா நெறியை கடைப்பிடியுங்கள். அதில் சமாதி நிலை அடையுங்கள். இதனால் ஞானம் அடையலாம். யாகம் போன்ற தவறான வழியால் இறைவனை அடைய முடியாது.
வாசியோகம் செய்வதால் யோகசித்தியுடன் காயசித்தி,வேதைசித்திஞானசித்தி கிடைக்கும். வாசி யோகம் செய்யாது பிற சித்தி அடைய முடியாது. அனைத்து சித்திகளுக்கும் வாசி யோகமே அடிப்படை.
 அட்டாங்க யோகம்:
அது பலித்திட அருளும் முக்தி. உறுதியான உடல் பெறஉயர்ந்த அறிவு பெறநிறைந்த சக்தி பெறஅறவழியில் நிறைந்த பொருள் ஈட்டநிறைவான இல்லறம் நடத்தஅமானுஷ்ய சக்தி பெற, உள்ளுறை இறைவனை அறியகாய சித்தி பெற,வேதை சித்தி பெறஞானம் சித்தி பெற வாசி யோகம் செய்தல் அவசியம். வாசி யோகத்தின் ஒவ்வொரு அங்கமாக பார்ப்போம்.படிப்படியாக வாசியோகம் செயல்முறை பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக