வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

நாசி துவாரங்களில் வாசி யோகம் பழகுதல்

 நாடி சுத்தி , பிராணாயாமம் வாசி யோகம் , வித்தியாசம் என்ன . ?
 

வாசி யோகத்தில்  இரண்டு நாசி சுவாசம் இடது நாசி சுவாசம், வலது நாசி சுவாசம்  ஒருநாசியில் உள்வாங்கி மறுநாசியில் வெளியிடல்  ஆகியவை ஏன் செய்ய வேண்டும் ?
 
நாடிகள் என்பது சக்தி ஓட்ட பாதைகள்.  நமது உடலில்  72000  நாடிகள் செயல் படுகிண்றன. 

இவை பத்து பிரதான நாடிகள் மூலம் கட்டு படுத்த படுகின்றன .. இந்த பத்து நாடிகளை மூன்று அதி  முக்கிய நாடிகள் கட்டுபடுத்துகின்றன .  அவை இடகலை, பிங்கலை, சுழிமுனை அல்லது குரு நாடி. அவற்றுள் சுழிமுனை நாடியை வாசி யோகம் மூலம் நாம் உருவாக்குகிறோம். 

 இடகலைபிங்கலை  ஆகிய நாடிகள்  நமது இடது நாசி  மற்றும் வலது நாசி துவாரம் வழி  இடதுபக்க செயல்பாடு வலது பக்க செயல் பாடு என  பிரித்து செயல்படுகின்றன. ஆயினும்   இடகலை என்ற சந்திரகலை 16  நாத கலை சக்தி கொண்டது.   பிங்கலை என்ற  சூரிய நாடி 12 விந்து கலை சக்தி கொண்டது .இதனால் நாத உயிர்சக்தி (positive life energy) மற்றும் விந்து உயிர் சக்தி ( negative life energy )  சமநிலை அடையவில்லை. 

 இதற்காக சுழிமுனை என்ற நாடியை வாசி யோகத்தில்  உருவாக்குகிறோம் . இதில் தாரக கலை என்ற 4 கலை சக்தி  (கிடைக்கும் )பெறும் பலம் கொண்டது. இதனால் இடகலை பிங்கலை சமநிலை பெற்று உடல் இளமையுடன்  அழியாமல்  இருக்கும். இந்த பிரபஞ்சத்தில் இருந்து 32 கலை  பெறப்படுகிறது.  இந்த உயிர் சக்தி நமது உடல் முழுவதும் பரவி உடலில் உருவாகும் 64 கலை சக்தியுடன் சேர்ந்து 96 கலை சக்தி உருவாக்கும் . இது அளப்பறி சக்தி . நிலை . இதுவே அணைத்து அபூர்வ சக்திகளுக்கும்  சித்திகளுக்கும் அடிப்படை. 
.
சாதரணமாக நாம் இரண்டு நாசியில் சுவாசிக்கிறோம்.அப்பொழுது நாத கலை !விந்து கலை 12 என்ற வித்தியாசத்தால் 4  கலை வீணாகிறது  இதை சமநிலை படுத்த ஒருநாசியில் சுவாசம் அடைபட்டு நிகழும் .அப்பொழுது குறைவான சக்தியே பெறப்படும் . உயர்ந்த சக்தி பெற வாசி யோகா ஆரம்பத்தில் மூச்சை நெறிப்படுத்த துவங்குகிறோம் . முதலி
ல் காலத்தை நெறிபடுத்தி இரண்டு நாசியிலும் சுவாசித்து  வாசி உருவாக்குகிறோம்இவ்விதம் .வாசிபழகுதல்  துயர் தராது.

அதன் பின் நாடிகளை நெறிபடுத்தி வாசியோகம் பழக வேண்டும்.அதற்கு 
  • முதலில் இரண்டு நாசியிலும் சுவாசித்து வாசிபழகுதல் வேண்டும்.
  • அதன்  பிறகு வலது நாசியில் யில் வாசி பழக வேண்டும் 
  • அதன்பின் இடது நாசியில் வாசி பழக வேண்டும்  . 
இவை நாடிசுத்தி எனப்படும் .
  • அதன் பின்  வலது நாசியில்  உள்வாங்கி கும்பித்து  இடது வெளியிடல்  
  • அதன் பின்  இடது நாசியில்  உள்வாங்கி கும்பித்து   வலது வெளியிடல்  என வாசி பழகவேண்டும் .
  இது பிராணயாமம்
 
 இப்படி  படிப்படியாக நாசியை பயன்படுத்தி வாசியோகம்  பழக வேண்டும் .
 அதன் பின் ஆதாரதளங்களில்  பிராணாயாமம் செய்து வாசியோகம்
பழக வேண்டும்.

வெள்ளி, 20 ஜூலை, 2018

துரிய நிலை தியானம்

துரிய நிலை தியானம் என்றால் என்ன ?

இது ஒரு உயர் நிலை வாசி யோகம் .
.
"
தண்னை தான் தான் அறிந்து பார்க்கும்போது
தத்துவமாய் நின்றதொரு தொண்ணுற்று ஆறு .".... யூகி முனி

இறைவன் 96 தத்துவங்களாக மாறி மனிதனாக இருக்கிறான் என்பதே "தான் ." அல்லது நான். இந்த 96 தத்துவங்களில் அவஸ்தை அல்லது அவஸ்தா என்பது உணர்வு நிலை . இந்த உணர்வு நிலை ஐந்து நிலைகள் கொண்டது .

1.
ஜாக்கிரதை அல்லது சுய உனர்வுநிலை அல்லது விழிப்பு நிலை.  

இந்த நிலையில் எல்ல உறுப்புகளும் செயல்படும். சுய உணர்வுடன் செயல் படுவீர்கள்

2.
சொப்னா அல்லது கனவுநிலை.  

தூங்கும் போது தூக்கமும் விழிப்பும் அற்ற நிலை . இங்கு கண், வாய், மூக்கு, செவி, உடல் ஆகிய பொறிகள் ஐந்தும் செயல்படாது. ஆனால் பார்த்தல், ருசித்தல், நுகர்தல்,கேட்டல், உணர்தல் ஆகிய புலன் ஐந்தும் செயல் படும்

3
சுழுத்தி ஆழ் நிலை தூக்கம்.  

பொறிகளும் புலனும் வேலை செய்யாது. ஆனால் உடலில் சக்தி நிரப்பப்படும். சக்தி நிரம்பியவுடன் மீண்டும் விழிப்பு அல்லது கனவு வரும்

4.
துரியம் :  

ஐம்புலன்கள் வேலை செய்யாது. சக்தி நிரம்பியபின் விழிப்பும் வராது. ஆணால் அதீத ர்வு என்ற பிறபஞ்ச உணர்வு நிலை உருவாகும். அப்பொழுது மூளையில் காமா அலை என்னும் சிறப்பு அலை உருவாகும். இது பிரபஞ்ச தொடர்பை ஏற்படுத்தும். இந்த அலை நிலையில் உள்ள பிற சித்தர் களுடன் தொடர்பு ஏற்படும். இந்த நிலை கோமா நிலையுடன் ஒப்பிடலாம். கோமா நிலையில் காமா அலை உருவாகாது. பிறபஞ்ச தொடர்பு ஏற்படாது . புற தோற்றத்தில் இரண்டும் ஓன்று போல் இருக்கும்

5.
துரியா தியானம் :  

இந்த நிலை இறந்தும் இற்வாது போன்ற நிலை. இந்த நிலை கண்டவர் விண்டது இல்லை. இது மௌனம் என்ற யோகநிலை. உணர்ந்து பார் என்று திரு மூலர் சொல்கிறார்

அஷ்டாங்க யோகம் அல்லது வாசி யோகத்தில் ஏழாவது அங்கம் தியானம். அஷ்டாங்க யோகத்தில் தியான நிலை அடைந்து அதில் துரிய அவஸ்தை அல்லது துரியா உணர்வுநிலை அடைவது துரியா தியானம். இந்த துரிய தியானத்தில் சித்தர்களுடன் பேச முடியும்.