வெள்ளி, 23 செப்டம்பர், 2016

சூட்சுமத்தை உணர்த்த ஒரு குட்டி கதை

ராமர் சீதை இணைந்த  பிற்கு ராம பக்த அனுமன் தினசரி மாலை சேது கரையில் ராமரை நினைத்து தொழுது பின்பு சேதுவை ஒரு பிரதட்சினமாக பறந்து வருவது வழக்கம்.  

அப்படி ஒரு நாள் செய்து கொண்டு இருக்கும் பொழுது சனீஸ்வரர்  அந்த வழியாக வந்தார்.அதை கவனிகாது தன் பூஜையில் கண்ணும் கருத்துமாக இருந்தார் அனுமன். தான் வருகையில் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள் ஆனால் இந்த குரங்கு நம்மை அவமதிக்கிறதே என சனிக்கு கோவம் வரவே அனுமனை தன்னிடம் சண்டையிட்டு ஜெயிக்கும்படி அழைத்தார்.  

ஆனால் அனுமனோ தான் பூஜை முடித்து ராம சேதுவை சுற்றி வர வேண்டும், அதனால் அதற்கெல்லாம் நேரமில்லை என மறுத்தும் சனி பிடிவாதமாக வற்புறுத்தி கொண்டே இருந்ததால், அனுமன் தன் வாலால் சனியை சுழற்றி அழுத்தி கொண்டு சேதுவை சுற்றி பறக்க ஆரம்பித்தார். வழியில் மலைகள், குன்றுகள்,மரங்கள் என அனைத்திலும் சனி அடிபட்டு அனுமனின் பிடியில் இருந்து விடுபட முடியாமல் பின்பு மன்னிப்பு கேட்டு விடுபட்டு கொண்டார்.  

விடுபட்ட சனிக்கு உடல் முழுதும் ரத்தம் மற்றும் காயங்கள், வலி. அதை கண்ட அனுமன் அவருக்கு கடுகு  எண்னை கொடுத்து உடம்பில் தேய்க்க  சொல்ல, தேய்த்த   சனிக்கு உடனடி குணம் கிடைத்தது. உடனே அனுமனுக்கு நன்றி கூறி அன்று முதல் "இந்த எண்னை எனக்கு ப்ரீதி செய்தது ஆகவே யார் கடுகு எண்ணையை சனிக்கிழமைகளில் தானமாக கொடுக்கிறார்களோ அவர்களுடய மன,உடல் வலிகளை  போக்குவேன். என உறுதி அளித்தார் சனி.

.இது இதிகாசம்.இது மட்டுமில்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களும் கடுகு எண்னைக்கு உண்டு.ஆகவே நல்ல பலன் நிச்சயம் உண்டு. மேலும் கருப்பு உளுந்து,வெல்லம் சனிக்கு ப்ரீதியானது. ஆகவே தான் உளுந்தை ஊர வைத்து குரங்குக்கு கொடுக்க சொல்வது.அனுமனிடம் நேரடியாக கொடுக்க முடியாதல்லவா ?

யாம் கொடுக்கும் ஒவ்வொரு பரிகாரமும் மிகுந்த பலன் வாய்ந்தவையும், சக்தி மிக்கதும் ஆகும். நேரமின்மை காரணமாக ஒவ்வொரு விசயத்திற்கும் முழு விவரங்கள் கொடுக்க இயலுவதில்லை.நம்பிக்கையுடன் செய்தால் பலன் நிச்சயம்.!!

வியாழன், 8 செப்டம்பர், 2016

லட்சுமி வசியம் தரும் நவகிரக தூப பொடி

செல்வவளம் லட்சுமி வசியம் தரும் நவகிரக
தூப பொடி.

லட்சுமி வசியம் தரும் நவகிரக தூப பொடி க்கான பட முடிவு1.அரசு,                              2.மருதாணி,               3.கஸ்தூரி,   
    
 4.சாம்பிராணி,              5.செந்நாயுருவி,       6.இலுப்பை,
 
 7.புனுகு,                          8.புங்கன்,                     9.முந்திரி, 

10.குங்கிலியம்,          11.வெள்ளெருகு,      12.ஏலக்காய்,
 
13.வெண்கடுகு,          14.கோராசனை,       15.கோஷ்டம், 
 
16.நொச்சி,                    17.ரோஜா இதழ்,      18.ஆலமரம், 
 
19.சந்தனம்,                  20.அகில்,                   21.தேவதாரு, 

22.துளசி                         23.தாமரை

மெற்கண்ட 23 மூலிகைகளையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து தூளாக்கவும். இந்த பொடியை தினந்தோறும் வீடு,தொழில் செய்யும் இடத்தில் சாம்பிராணி புகை போல காட்டினால் கெட்ட சக்தி விலகி, நல்ல சக்திகள் உருவாகும். செல்வவளம் உண்டாகும். தொழில் செய்யும் இடத்தில் மக்கள் அதிகம் வருவார்கள். வியாபாரம் பெருகும். குடும்பத்தில் செல்வம், சந்தோசம் எப்போதும் இருக்கும்.
இது நவகிரக தோசத்தை போக்கும். செல்வாக்கு அதிகரிக்க செய்யும். வசியத்தை உண்டாக்கும். நினைத்தை அடைய செய்யும். வீட்டில் தினம்தோறும் நவகிரக ஹோமம் வளர்த்ததுக்கு ஒப்பான பலன்களை தரும். கோர்ட் கேஸ் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும். நோய் கிருமிகளை விரட்டி நோயாளிகளை குணப்படுத்தும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் ஆரோக்கியமாக வளர, கல்வி சிறப்பாக அமையநினைவாற்றல் மேம்பட செய்யும்.  அரசு ,ஆலம் துகள்கள் இருப்பதால்  குருவருள் உண்டாகும். குரு தோசமும் விலகும். வெண்கடுகு இருப்பதால் சகல தோசமும் நிவர்த்தியாகும். தடைபட்ட சுபகாரியங்களும் உடனே நடக்கும்..

மாந்திரீக தாந்திரீக ரகசிய 20 பரிகார முறைகள்.

(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.

(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.

(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.

(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.

(7)அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.

(8)செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.

(9)7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.

(10)வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.

(11)ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.

(12)படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.

(13)வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.
வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.

(14)உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும்.

(15)உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்
போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்.

(16)சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .

(17)வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.

(18)கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.

இதற்குப் பரிகாரம்:-
-----------------------------
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று.

(19)சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.

இதற்குப் பரிகாரம்:-

ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு "ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய" என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்.

(20)கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.