புதன், 7 செப்டம்பர், 2016

உச்சிஷ்ட கணபதி வசியம்


உச்சிஷ்ட கணபதி யந்திரம்




உச்சிஷ்ட கணபதி மூலமந்திரம் :
ஓம் க்லீம் ஸ்ரீம் க்ரீம் நமோ பகவதி
ஹஸ்திமுகாய லம்போதராய உச்சிஷ்டாய மகாத்மனே
க்ரீம் க்லீம் ஸ்ரீம் தேர்தோ உச்சிஷ்டாய சிவா .
(உரு 12000)
பூஜை முறை :

வளர்பிறை வெள்ளிக்கிழமை இந்த பூஜை துவங்கலாம் .வெற்றிலை பாக்கு பழம் ,அவல் , பொறி ,கடலை ,பிச்சிபூ , சந்தன அத்தர் , தேங்காய் ,எலுமிச்சை ,எள்ளுருண்டை பயறு வகைகள் ,ஊதுபத்தி ,சாம்பிராணி ,கற்பூரம் ,இவ்வளவு பொருட்களும் படைக்க வேண்டும் .

அதற்கு முன் ஒரு அமாவாசை தினத்தில் ஊரின் முச்சந்தி பகுதியில் சென்று அல்லது சுடுகாட்டில் சென்று ஒரு தேங்காய் ,கன்னி கோழி முட்டை ,சிவப்பு சேவல் ,இளவங்காய் அல்லது வெண்பூசணி ,இவைகளை தன்னையும் பூஜை செய்யும் இடத்தையும் சுற்றிக்கொண்டு அங்கெ சென்று ஒரு படையல் போட்டு நான் இந்த உச்சிஷ்ட கணபதி பூஜைக்காக இருக்கிறேன் எனக்கு பூஜையின் பொது எந்த பாதிப்புகளும் வராமல் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் சீக்கிரம் சித்தி கிடைக்க அருள் செய்ய வேண்டும் என்று சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கி  அதன் பிறகு சாம்பிராணி தூபம் காட்டி பலி கொடுக்க வேண்டும் .

இந்த வேலைகளை முடித்து விட்டு அதன் பிறகு பூஜை செய்தால் தான் சித்து உடனடியாக கிடைக்கும் .இதனால் அஷ்ட கர்மங்களும் ஆடலாம் மற்றும் பேய் முதல் பிரம்மா ராட்சசி வரை  விரட்டலாம் .பேய் பிசாசு உள்ள வீடுகளில் நம் பெயரை கூறினாலே அனைத்தும் ஓடி விடும் .நமக்கு எதிரிகளால் எந்த ஆபத்துகளும் வராது நம்மை எதிர்க்க நினைப்பவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே உங்கள் கண் முன்னே அழிவதை காணலாம்


எந்த வேலை செய்ய வேண்டுமானாலும் ஒரு சீட்டில் நடக்க வேண்டிய காரியத்தை எழுதி ஒருநாள் பூஜையில் வைத்தால் போதும் அடுத்த கணமே அந்த காரியம் நடந்து விடும் .உச்சிஷ்ட கணபதியால் நமக்கு சகல வசீகர தன்மையும் ஏற்படும் ,எதிரிகள் யாரும் இருக்க மாட்டார்கள் அஷ்ட லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும் .